பக்கங்கள்

ஞாயிறு, 11 நவம்பர், 2012

கவிதை கிறுக்கல் ....


கவிதை கிறுக்கல் ....



கண்ணாடி 


என் விம்பத்தை அப்படியே 

இன்னொரு உருவமாக 
பார்க்கிறேன் . என்ன 
நாம் பிறந்ததில் இருந்து 
பார்த்து பார்த்து 
நம்மையே ரசிக்க வைக்கிறது 
அது வேற ஒன்றும் இல்லை 
கண்ணாடி கண்ணாடி 


தவறு 

நாம் பல நேரங்களில் 
பிழை விடுகிறோம் 
தவறு என்று தெரிந்து 
சில காரியங்களை 
செய்கிறோம் , ஆனால்,
சில நேரங்களில் 
தவறு என்று தெரியாமல் 
தவறை செய்து விட்டு 
வருந்துகிறோம் -இது 
தான் மனித இயல்பு .

அன்பான நட்பு 

எங்கோ பிறந்து , வளர்ந்து 
எங்கையோ சந்தித்து 
நண்பர்கள் ஆகிறோம் 
எமது பிரச்சனைக்கு நண்பனிடம் 
தீர்வை கேட்கிறோம் . 
அன்பான நட்புக்கு கோபம் இல்லை, 
துரோகம் இல்லை . என்றைக்கும் 
அன்பு நீண்டு கொண்டு செல்லும் ...

காதல் அல்ல 

சொத்துக்காக, பணத்துக்காக 
ஒருவரை ஏமாற்றி இன்னொருவர் 
திருமணம் செய்து கொள்கிறார்களே 
இதையும் காதல் என்று சொல்லி 
கொச்சைபடுத்துகிறார்களே.......

பெற்றோரின் கஷ்டம்

பிள்ளைகளை கஷ்டப்பட்டு 
வளர்த்து ஆளாக்கியதும் 
அவர்கள் பட்ட கஷ்டத்தை 
எல்லாம் மறந்து பிள்ளைகள் 
தமது போக்கில் தாய், தந்தையரை 
விட்டு பிரிந்து தமக்கு என்று 
ஒரு வாழ்வை தேடி செல்கிறார்கள் 
எல்லாவற்றையும் இழந்து 
நிர்க்கதியாகி வயோதிப வயதில் 
தள்ளாடுகின்றனர் பெற்றோர் .
இன்றைய நிலைமை இப்படி இருக்கிறதே .......

சிறுவர்களின் பெற்றோர்களுக்காக .........


இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் . அவர்களை நல்ல  பண்புகளுடனும் , பழக்கவழக்கத்துடனும் , பாசத்துடன் அன்பையும் காட்டி பெற்றோர் வளர்க்க வேண்டியது அவசியம் . இளம் பராயத்திலே சிறந்த அறிவுள்ள புத்திசாலியான பிள்ளையாக அவர்களை வளர்த்து இந்த உலகில் அவனும் ஒரு சிறந்த தலைமகனாக மிளிர வேண்டும் .

இன்று உலகம் பூராக சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது . ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சிறுவர்களுக்கான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது . இன்று சிறுவர்கள் மன உளைச்சலுக்கும் , கல்வி அறிவின்றியும் , சிறுவயதில் பெற்றோரை இழந்து அநாதைகளாகவும் , சிறுவயதிலே கூலித்தொழில் செய்து தமது அன்றாட நாட்களை கடத்துகின்றனர் . 

வறிய சில நாடுகளில் சிறுவர்கள் சுத்திகரிப்பு பணிகளுக்கும், கூலி வேலைகளுக்கும் ஈடுபடுத்தப்படுகின்றனர் .இளம் வயதில் கல்வி அறிவின்றி வளரும் சிறார்கள் பெரியவனானதும் இந்த உலகில் அவனை கவனிப்பார் யாரும் அற்று ஒரு அடிமைத்தனுத்துக்குள் சிக்கி கொள்கிறான் . பெற்றோர்கள் தமது கஷ்டங்களையும் தமது பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும். 

ஆடம்பரமான வாழ்க்கை வாழும் போது அவனுக்கு கஷ்ட, துன்பங்கள் தெரியாது வளருகிறான். வளர்ந்து அவனுக்கு ஒரு கஷ்டம் , துன்பம் வந்ததும் அதனை எதிர்கொள்ள பயப்படுகிறான். உடனே மனம் உடைந்து அதனை எப்படி சமாளிப்பது என்று அவனுக்கு தெரியாமல் திண்டாடுகிறான். எல்லோருடைய வாழ்விலும் கஷ்ட, துன்பங்கள் வரும் . அதனை எவ்வாறு சமாளித்து முன்னேறுவது என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் . வசதி படைத்தவர்கள் அநாதை சிறுவர்களுக்கு உதவி செய்து அவர்களின் கல்வி செலவுகளை தாம் ஏற்று அவனை ஒரு சிறந்த மனிதனாக கூட மாற்றலாம் .

சிறுவர்களுக்கு சிறு வயதிலே சேமிப்பு பழக்கத்தை பழக்க வேண்டும் . தேவையற்ற செலவுகளை குறைத்து எவ்வாறு சேமிப்பது பற்றி பெற்றோர் அறிவுரை நல்குவது அவசியம். 

ஒரு சிறுவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அவனது பெற்றோர் , அவனிருக்கும் சூழல் என்பன காரணிகள் ஆகின்றன . எனவே சிறுவர்களை அடித்து திருத்துவதை விட , பேசி கத்துவதை விட அன்பால் அவர்களை திருத்த முயலுங்கள் . எதனையும் அன்பாக , ஆறுதலாக சொல்லி பாருங்கள் . அன்பால் முடியாதது ஒன்றும் இல்லை . 

காலை உணவின் முக்கியத்துவம்



எம்மில் பலர் காலை உணவை தவிர்த்துக் கொள்கின்றனர் . காலை உணவின் அவசியம் பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை . காலை உணவை நாம் எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது . காலையில் நாம் உண்ணும் உணவு பூரணமாகவும் , சத்துள்ளதாகவும் இருக்க வேண்டியது அவசியம் . 

இரவில் நாம் உணவை உட்கொண்டு விட்டு நித்திரைக்கு செல்கின்றோம் . எட்டு , ஒன்பது மணி நேரம் இடைவெளிக்குப் பின்பு தான் நாம் காலை உணவை உண்கின்றோம் . நமக்கு காலையில் சக்தி கிடைக்க வேண்டும் . அதற்க்கு காலை உணவை உன்ன  வேண்டும் . காலையில் நாம் உண்ணும் உணவு சூடானதாகவும் , சத்துள்ள உணவாகவும் இருக்க வேண்டும். 

நாம் சாப்பிடும் உணவு குளுகோஸ் என்கிற சர்க்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு தேவையான எரிசக்தியாக செயல்படுகிறது. இரவு முழுவதும் தூங்கும் போது உடலில் உள்ள க்ளூகோஸ் 6 லிருந்து 8 மணி வரை போதுமானது அதனால் நாம் தூங்கி எழுந்தவுடன் இரவு பட்டினியனால் சர்க்கரை காலையில் குறைந்து விடும். மூளை சக்தியை தேடி தவிக்கும் வேறு உடல் பாகங்களிலிருந்து சர்க்கரையை இழுத்துக் கொள்ளும். இதனால் உடல் ஆரோக்கியம் பழுதடையும். எனவே, காலை உணவினால், குளூக்கோஸ் கிடைக்கப்பட்ட மூளை சரிவர இயங்குகிறது. காலை உணவை தவிர்க்கக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் காலை உணவை எடுத்துக் கொள்ளவும். பழைய உணவை உண்பதை விட உடனே தயாரித்த உணவை உண்பது மிகவும் நல்லது .

காலையின் நாம் உண்ணும் உணவு தான் நாள்முழுதும் தேவைப்படும் சக்தியை அளிக்கிறது . அதிகளவான உணவை காலையில் உன்ன வேண்டிய அவசியமில்லை . குறைவான உணவாக இருந்தாலும் சத்தான உணவாக இருக்க வேண்டும் . அதிகம் காலையில் சாப்பிட்டால் சோம்பல்தனம் தான் வரும். நம்மில் பலர் நாம் மெலிவாக இருக்க வேண்டும் என எண்ணி காலை உணவை தவிர்த்துக் கொள்கிறார்கள் . காலை உணவில் அவசியம் இருக்க வேண்டியவை நார்ச்சத்து மிகுந்தவை. இட்லி , தோசை , ரொட்டி, ஓட்ஸ் போன்ற உணவுகளையும் உப்புமா ,  கடலை, பயறு போன்ற உணவுகளையும் உண்ணலாம். 

நாம் இந்த காலை உணவை தவிர்ப்பதாலே உடலில் குறைபாடு , நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. காலை உணவை நாம் உண்பதால் நாம் நீண்டநாள் வாழலாம், நம் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் பெறவும் முடியும் . காலை உணவின் அவசியம் பற்றி எல்லோரும் அறிந்திருக்க வேண்டும் . இன்றைய அவசர உலகில் நம்மில் பலர் காலை உணவை உண்பதில்லை . எவ்வளவு வேலை இருப்பினும் கொஞ்ச நேரத்தை ஒதுக்கி காலை உணவை உண்ண வேண்டும். 









சிந்தனைக்கு ...................



வாழ்க்கையில் ஆயிரம் தடைகள்  வந்தாலும் அவற்றை தன்னம்பிக்கையுடன் எதிர்த்து முன்னேறு . 

காதலில் தோல்வி என்று கலங்காதே . ஒரு மீன் இல்லாவிட்டால் இன்னொரு மீன் . 

தோல்விகளில் தான் நாம் அதிக பாடம் கற்றுக்கொள்கிறோம் . 

நல்லவனுக்குத்தான் சோதனைகளும், வேதனைகளும் அதிகம் . 

தீய பழக்கங்களுக்கு அடிமையாகி நம்மையே நாம் அழித்துக் கொள்கிறோம் . நோய் வந்து இறுதிக் காலத்தில் தான் பின்பு வாழ்க்கையை பற்றி சிந்திக்கின்றோம் .பயன் ஏதும் இல்லை .

எம்மை பற்றி நாமே புகழ்வதை விட இன்னொருவர் எம்மை பற்றி புகழும் போது அதில் ஒரு திருப்தி இருக்கிறது . இகழும் போது முகம் கறுக்கிறது.

ஒருவன் வாழ்க்கையில் தந்தை , தாய் ஆகும் போது தான் அவனுக்கு வாழ்வின் அர்த்தம் புரிகிறது .

ஒருவர் பெற்றோர் என்ற அந்தஸ்தை அடையும் போது தான் அவர்களின் பெற்றோர் பட்ட கஷ்ட , துன்பங்கள் விளங்குகிறது . 

நமக்கு துன்பம் , கஷ்டம் என்று வரும் போது தான் நாம் எவர் நல்லவர் , எவர் கெட்டவர் என்று அறிகிறோம் .

கஷ்டத்தில் தோள் கொடுக்கும் போது செய்யும் உதவி தான் பேருதவி . 

சோம்பல் தனம் கூடாது ........



மகனே படி , படுத்து படுத்து எழும்பாதே . சோம்பேறித்தனமாக இருக்காதே . இது தான் எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் . இந்த வார்த்தையை தாயோ , தந்தையோ தினம் தினம் உச்சரிப்பார்கள் . காலையில் நேரத்துக்கு எழும்பி நமது கடமைகளை செய்து முடிக்க வேண்டும் . சோம்பேறித்தனமாக பஞ்சியாக இருக்கிறது இன்னும் கொஞ்ச நேரம் படுப்பம் என்று ஜோசித்து படுத்து பின்பு கண் முழிப்பார்கள் காலை பத்து மணிக்குத் தான் .

எல்லோரும் தத்தமது கடமைகளை சரி வர செய்ய வேண்டும் . வேலைக்கு செல்பவர்கள் செல்ல வேண்டும். படிப்பவர்கள் படிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தமது தொழிலில் நேர்மை , படிப்பில் கவனம் தேவை . நாம் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு செல்வதற்க்கு முன்னேற்றம் தேவை . அந்த முன்னேற்றத்தின் முதல் எதிரியே சோம்பல் தனம் தான் .

நீ ஒரு சோம்பேறி , ஒன்றுக்கும் உருப்படாதவன் என்று ஒருவனை பார்த்து இன்னொருவர் பேசுவார் . அப்போது எவ்வளவு கோபம் வருகிறது . நாம் ஏன் அவர் அப்படி பேசும்படி நடந்து கொள்ள வேண்டும் . கடைக்கார முதலாளி வேலை செய்யாமல் தொழிலாளி இருந்தால் கூட இப்படித்தான் பேசுவார் . குறித்த நேரத்துக்கு நித்திரைக்கு சென்று குறித்த நேரத்துக்கு எழும்பி விட வேண்டும். 

குறித்த வேலையே எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்து முடிக்க வேண்டும் . அதுதான் முக்கியம் . சுலபமாக செய்து முடிக்க வேண்டிய வேலையே நேரம் தாழ்த்தி செய்தால் என்ன சொல்வார்கள் தெரியுமா . இவனிட்ட வேலையே குடுத்தா விடியும் . அது ஒரு சோம்பேறி என்று சொல்வார்கள் . 

காலையில் எழுந்து உடல்பயிற்சி செய்து துரிதமாகவும் , வேகமாகவும் எமது கடமைகளை செய்து முடிக்க வேண்டும். இன்று நடக்க வேண்டிய காரியங்களை செவ்வனே முடிக்க வேண்டும் . நாளைக்கு நாளைக்கு என்று சேமித்து வைக்க கூடாது . சோம்பேறித்தனத்தை விட்டு ஒழியுங்கள் . 

அதிகமா கோபப்படுறீங்களா.........



கோபப்படாதவன் யாரும் இல்லை . எல்லோருக்கும் கோபம் வருகிறது . சிலர் வீண் வம்பிழுத்து சண்டை பிடித்து கோபப்பட்டு கொள்கிறார்கள் . சிலர் கோபப்பட்டு சாகும் வரையில் ஒருவருக்கு ஒருவர் கதைக்காமலும் உள்ளனர். கூடுதலாக குடும்பங்களில் அதிகம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போகிறவர்களும் , மாமியார் வீட்டுக்கு போகிறவர்களும் தான் அதிகம் .

ஆருயிர் நண்பர்களும் தேவையில்லாமல் சிறிய விடயங்களுக்கு கூட கோபித்து பிரிந்து விடுகிறார்கள் . எதனையும் மனம் விட்டு சரி எது பிழை எது என்று விசாரித்து பேசி ஒரு தீர்வை பெறலாம் . அப்படி இல்லை . கோபித்துக் கொண்டு இனிமேல் உன்னுடன் நட்பும் வேண்டாம் , சகவாசமும் வேண்டாம் என்று பிரிந்து விடுகிறார்கள் .

கோபம் வந்தால் வாயில் வந்தவற்றை பேசி விட்டு கோபம் குறைந்ததும் நானா இப்படி எல்லாம் பேசினது என்று கேட்பவர்களும் உள்ளனர் . ஏன் இந்த கோபம் எனக்கு இப்படி அதிகம் வருகிறது என்று சிந்திப்போரும் உண்டு .

கோபம் ஏன் ஏற்படுகிறது ....
# எமக்கு பிடிக்காத விடயங்களை பேசும் போது கோபம் வருகிறது .
# தான் சொன்னதை இன்னொருவர் கேட்காமல் உதாசீனம்  செய்யும் போது கோபம் வருகிறது .
# ஒருவர் இன்னொருவரை ஏமாற்றும் போது 
# சொன்ன நேரத்துக்கு இன்னொருவர் சமூகம் தராத போது 
# பொய் பேசும்போது 
#ஒருவனை பற்றி அவதூறாக இன்னொருவர் பேசும்போது 

இப்படி பல காரணங்கள் உண்டு எமக்கு கோபம் வருவதற்க்கு . எனவே நாம் என்ன செய்யலாம் . கோபம் வந்தால் பேச்சை குறைக்கலாம் . கொஞ்ச நேரம் பேசாது அமைதியாக இருக்கலாம் . அந்த இடத்தை விட்டு அகன்று விடலாம் . அமைதியான பேச்சும் , அடக்கமும் சிறந்தது . 

மற்றவர்களின் மனம் நோகாமல் நடக்க வேண்டும்



எல்லோரும் ஒவ்வொரு சூழ்நிலைகளில் வாழ்கிறார்கள் , வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . ஒருவருக்கு பிடித்தது இன்னொருவருக்கு பிடிக்காது . இது இயல்பான விடயம் . எமக்கு தெரிந்தவருக்கோ , அல்லது எமது நண்பனுக்கோ எது பிடிக்கும், எது பிடிக்காது என்று எமக்கு தெரிந்து இருக்க வேண்டியது அவசியம் .

எல்லோரிடமும் அன்பாக பேச வேண்டும் . சந்தோசமாக இருக்க வேண்டும் . அதிகம் கோபப்பட கூடாது  என்று சிறு வயதில் இருந்தே பெற்றோர் பிள்ளைகளை  வளர்க்கிறார்கள் . அதில் சில பிள்ளைகள் பெற்றோரின் பேச்சை கேட்டு நடந்து கொள்கிறார்கள் . சில பிள்ளைகள் அவற்றை காதில் போட்டு கொள்வதே இல்லை . 

ஒரு பெரியவர்கள் வீட்டுக்கு வந்தால் உபசரித்து அவரை வரவேற்று ஆசனத்தில் அமரும்படி சொல்ல வேண்டும் . இப்போதைய காலகட்டத்தில் எத்தனை பேர் அப்படி எழுந்து பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள் . வா, இரு , போ இதுதான் நடக்கிறது . வந்தவர்கள் சிலர் அவமானப்பட்டு போகும் நிலைமையும் உண்டு . 

ஒருவருடன் பேசும் போது அவரின் மனம் நோகாது பேச வேண்டும் . அவருக்கு பிடிக்காத விடயங்களை நாம் பேச கூடாது . இதனால் பிரச்சனைகள் தான் வரும் . அவர் கோபப்படுகிறார் என்று தெரிந்தால் அந்த விடயத்தை பற்றி பேசக் கூடாது . நாம் வீட்டில் இவற்றை கற்றுக் கொண்டால் நாம் எங்கு போனாலும் இந்தப் பழக்கம் கைகொடுக்கும் .

நாம் புதிதாக வேலைக்கோ போனால் என்ன , திருமணம் செய்து வேறு இடம் போனால் என்ன , தெரியாத ஒரு இடத்துக்கு போனால் என்ன நாம் எங்கும் சமாளித்துக் கொள்ளலாம் . எனவே மற்றவர்களை புரிந்து கொண்டு , மற்றவர்களின் மனம் கோணாது நடந்து கொள்வது நமது பேச்சிலும் , நடவடிக்கையிலும் தான் உள்ளது . 

மனம் விட்டு பேசுங்கள்



இன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடியாத நவீன உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் . மனம் விட்டு பேசாததனால் தான் பிரச்சனைகளும் எழுகின்றன . 

மனம் விட்டு பேசாததனால் நண்பர்களிடையே பிரிவு ஏற்படுகிறது . கணவன் , மனைவிக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு பிரிவு உண்டாகின்றது . ஒருவர் மீது இன்னொருவருக்கு சந்தேகம் உண்டாகின்றது . அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் . அதற்க்கு நண்பர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேச வேண்டியது அவசியம் . அப்போதுதான் அவர்களின் பிரச்சனை தீரும் .

அப்பாவுக்கும் மகனுக்கு அடிக்கடி மன கஷ்டம் , சண்டை என்பன வரும் . அம்மா தான் இருவருக்கும் இடையிலான சண்டையை தீர்த்து வைப்பார் . என்ன நடந்தது என்று மகனிடம் தந்தை கேட்க மாட்டார் . வீணாக சண்டை பிடிப்பார் . மகனிடம் என்ன நடந்தது என்று கேட்டிருந்தால் , மனம் விட்டு பேசியிருந்தால் பிரச்சனையை தீர்த்து விடலாம் . 

கணவன் - மனைவிக்கு இடையிலான பிரச்சனைகள் தான் அதிகம் ஏற்படுகின்றன . எத்தனையோ தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர் . விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார்கள் . இதற்க்கு எல்லாம் காரணம் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசாமை தான் காரணம் . ஒருவர் மீது மற்றவர் அன்பு வைத்திருக்கிறார்கள் . பிரச்சனைகள் என்று வரும் போது அவற்றையும் சமாளித்து வாழ வேண்டும் . 

கணவனுக்கு நம்பிக்கைக்கு ஏற்ப மனைவி நடந்து கொள்ள வேண்டும் . அதேபோல் கணவனும் தனது மனைவி சந்தேகிக்கும் படியாக நடந்து கொள்ளுதல் கூடாது .ஒவ்வொருநாளும் அன்றாட பிரச்சனைகளை அலசி ஆராய வேண்டும் . சந்தோசங்கள் , துக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் . அதற்க்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி கொள்ளலாம் . அல்லது தேநீர் அருந்தும் போது ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்ளுதல் நல்லது .

என்ன நாம் இனி மனம் விட்டு பேசி சந்தோசமாக இருப்போம் . சண்டை வேண்டாம் . சச்சரவு வேண்டாம் . இனிமையான வாழ்க்கை தான் எல்லோருக்கும் வேண்டும் .

நகைச்சுவை படங்களை அதிகம் விரும்பும் ரசிகர்கள்



இப்போது எல்லாம் எந்தமாதிரியான படங்கள் அதிகம் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றால் அது நகைச்சுவை படங்களுக்குத்தான் . தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகை குறைந்து விட்டது என்று சொல்கிறார்கள் . ஏன் குறைந்து விட்டது என்று எண்ணிப் பார்த்தால் உண்மை விளங்கும் . ஒரே மாதிரியான கதையம்சம் கொண்ட படங்கள் , அடிதடி , ரீமேக் என்று ஒரே மாதிரி இருந்தால் ரசிகர்களுக்கும் அலுப்புத்தான் வருகிறது .

தியேட்டருக்குள் ரசிகர்கள் கொட்டாவி தான் விடுகிறார்கள் .படம் முடியும் வரை தியேட்டர் கதிரையில் ஒட்டி , படத்துடன் ஒன்றி , படத்தை ரசிக்க வேண்டும் . விறுவிறுப்பான , சிறந்த திரைக்கதை உள்ள , நகைச்சுவையான , உயிரோட்டமான நடிப்புள்ள படங்கள் வெற்றி அடைகின்றன . இன்று அதிகமான படங்கள் நகைச்சுவைக்காகவே பல நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடுகின்றன .

நிம்மதி , அமைதி தேடி அலையும் காலம் . வாய்விட்டு சிரிக்க கூட நேரமில்லை . இயந்திர வாழ்க்கை . அப்படியான கால கட்டத்தில் நாம் எல்லோரும் இருக்கின்றோம் . மூன்று மணி நேரம் நிம்மதியாக , சந்தோசமாக , வாய்விட்டு சிரித்து சந்தோசமாக இருக்க நகைச்சுவை படங்களுக்கு முக்கியம் தருகிறான் ரசிகன் . 

படத்துடன் ஒன்றி போகிறான் , விவேக் , சந்தானம் , வடிவேலு என நகைச்சுவை நாயகர்கள் படங்களில் இருக்கும் போது நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது . இவர்களுடன் படத்தின் ஹீரோவும் சேர்ந்து நகைச்சுவையாக நடிக்கும் போது இன்னும் படத்துக்கு பிளஷ் தான். இப்போது வெளிவந்து ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி , கலகலப்பு படங்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது .

ஒரே சென்டிமென்ட் , அடிதடி எல்லாம் எத்தனை தரம் தான் பார்க்கிறது . நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கும் இப்போது அதிக கிராக்கி நிலவுகிறது . இரவு நேரங்களில் ஒவ்வொரு படங்களினதும் நகைச்சுவை காட்சிகளை  ரசித்து பார்ப்பதில் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள் . ஓய்வு நேரங்களை நகைச்சுவைகளை கேட்பது , ரசிப்பது என பொழுதுகளை சந்தோசமாக கழிக்கிறார்கள் .

படங்களின் வெற்றிக்கு நகைச்சுவைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன . சிறந்த பாடல்கள் , இசை என்பனவும் அடங்கும் . அதனுடன் சிறந்த திரைக்கதை , நடிப்பு இருக்கும் பட்சத்தில் படம் சூப்பர் , டூப்பர் ஹிட் தான் . அதில் எவ்வித சந்தேகமும் இல்லை . 

சோகமும் , துக்கமும்



சோகங்கள் , துன்பங்கள் 
எல்லோருக்கும் வாழ்வில் 
வந்து போகின்றன .........
மனிதனாக பிறந்த எவனுக்கும் 
கஷ்டங்கள் ஏராளம் 
துன்பங்கள் ஏராளம் 
எல்லாவற்றையும் சமாளித்து 
தமது திறமை , தன்னம்பிகை 
மூலம் முன்னேறுபவன் 
வாழ்வில் மகிழ்ச்சி 
சந்தோசம் வாழ்வில் ஏற்படுகிறது .

துன்பங்களை கண்டு அஞ்ச வேண்டாம் , 
துயரங்களை கண்டு அலற வேண்டாம் 
என்று வாய் வார்த்தைகளால் கூறினாலும் 
அவற்றை நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் 
போது கலக்கம் வரத்தான் செய்கிறது 
சோகங்கள் , துன்பங்கள் நிரந்தரமில்லை 
விடிவு பிறக்கும் , வசந்தம் வீசும் .............

pavithulikal.blogspot. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக